இந்தியாவின் ஜனத்தொகை. குடி அரசு - கட்டுரை - 05.04.1931 

Rate this item
(0 votes)

இந்தியாவின் மொத்த ஜனத்தொகை 1931ம் வருஷத்திய கணக்குப்படி 351500000 முப்பத்தைந்து கோடியே பதினைந்து லக்ஷம் 1921ம் வருஷத்தில் 320900000 முப்பத்திரண்டு கோடியே ஒன்பது லக்ஷம். ஆகவே இந்த பத்து வருஷத்தில் 3கோடிக்குமேல்பட்ட ஜனங்கள் பெருகி இருக்கிறார்கள் சராசரி நூற்றுக்குப் பத்துப் போர்களுக்கு மேலாகவே அதிகரித்திருக்கின் றார்கள். 

ஒரு தேசம் அதிலும் கைத்தொழில் வளப்பமில்லாத தேசமாகிய அதாவது கைராட்டினத்தைக்கொண்டு பிழைக்கவேண்டிய நமது இந்தியா வானது. தனது ஜனத்தொகையை இப்படி ஏற்றிக்கொண்டே போனால் பிறகு வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும், நோயும் ஏற்படாமல் வேறு என்ன செய்யமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை, அன்னிய ஆட்சியை நம் நாட்டைவிட்டுத் துரத்தி விட்டதினாலேயே ஜன விருத்தி குறைந்து விடும் என்று சொல்லமுடியாது. ஆகையால் பஞ்சத்தை ஒழிக்கவும். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், அன்னியநாட்டுச் சாமான்களை பஹிஷ்கரிப்பது என்பதைவிட மக்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் தடுப்பதற்கு ஆதாரமான கர்ப்பத்தடை முறையைகையாள வேண்டியதே முக்கியமான வேலையாகும். ஆகையால் உண்மையான தேச பக்தர்களும், தேசியவாதிகளும், இந்தக் காரியத்தைப் பிரசாரம் செய்வதன் மூலம் இந்தியாவிற்கு விடுதலை தேடுவார்களாக.

குடி அரசு - கட்டுரை - 05.04.1931

Read 56 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.